யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை : மீறுவோருக்கு தண்டனை
யாழ்ப்பாணத்தில் பறக்கும் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் செல்பி எடுக்க பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
பட்டத்தின் உதவியுடன் இளைஞன் ஒருவர் வானில் பறக்க முற்பட்ட சம்பவத்தையடுத்து பொலிஸார் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளை குறைக்கும் வகையில் பொலிஸார் இந்தத் தடையை விதித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
தொண்டமனாறு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் பட்டம் விட பயன்படுத்தும் கயிற்றில் தொங்கி வானத்தில் 80 அடி உயரம் வரை சென்ற காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டன.

இது குறித்து எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து பொலிஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தடையை மீறி பட்டத்தின் கயிற்றில் தொங்கி வானில் பறக்க முற்படும் இளைஞர்கள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan