யாழ். மாநகர சபையில் அநாகரிகமான சொற்பிரயோகம்: வெளியேற்றப்பட்ட மாநகர சபை உறுப்பினர் (video)
யாழ். மாநகர சபை அமர்வில் வைத்து அநாகரிகமான சொற்பிரியோகத்தை உபயோகித்த மாநகர சபை உறுப்பினரொருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் அமர்வு இன்று (16.02.2023) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாநகர சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி ''வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுகின்றனர்'' என கூறியுள்ளார். இதனால் சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை அமர்வு
அதாவது குறித்த உறுப்பினர், சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உறுப்பினர்கள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீங்கள் என்னை வெளியேற்ற வேண்டாம் நானே வெளியேறி செல்கின்றேன் என உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி தெரிவித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
வெளியேற்றப்பட்டார் சபை உறுப்பினர்
குறித்த உறுப்பினருடைய அநாகரிகமான சொற்பிரயோகம் பதிவு செய்யப்படும் எனவும், சபையினுடைய வேண்டுகோளுக்கு அமைவாக அவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என யாழ். மாநகர சபைமுதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உறுப்பினருக்கு இந்த மாதத்துக்கான கொடுப்பனவும் ரத்து
செய்யப்படுகிறது எனவும், இந்த ஒரு மாதத்தில் சபையினுடைய செயற்பாடுகளுக்கு அவர்
அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
