யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறப்பு! (Photos)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கியானது பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிறீபவானந்தராஜா மற்றும் வைத்திய கலாநிதி யமுனாநந்தா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் இத் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாணத்திலேயே முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக இத் திரவ ஒக்சிஜன் தாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவனாந்தராஜா தெரிவித்துள்ளார்.



