யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (22.12.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
நிலவும் ஆளணிப் பற்றாக்குறை
இதன்போது வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்திய தாதிகளின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் அதனை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதேபோன்று, கட்டட வசதிகள் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில், தற்போது கட்டப்பட்டு வருகின்ற 6 மாடி கட்டடத் தொகுதியின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்த பட்சம் 800 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது.
இருப்பினும், 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 400 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றமை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக காணிகளை கொள்வனவு செய்து வைத்தியசாலையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை தொடர்பான அபிவிருத்திகள்
மேலும், தட்டுப்பாடாக உள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்தல், ஆய்வுகூட வசதிகளை விஸ்தரித்தல், தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான பிரிவொன்றை உருவாக்குதல் உட்பட பல்வேறு நிவர்த்திக்கத்தக்க விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அதேபோன்று, வெளிநோயாளர் பிரிவின் சேவை நேரத்தினை அதிகரிப்பது, வைத்தியசாலை வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள கழிவுநீர் வடிகான்களை சுகாதார முறைப்படி பேணுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் , விரைவில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். ஆகவே, முக்கியமான விடயங்களை அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை தயாரித்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
