கட்டுநாயக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை
உலகம் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ள JN.1 புதிய வகை கோவிட் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மாறுபாடு இலங்கையில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத பின்னணியில், தற்போதைய உலகளாவிய நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் நிபுணத்துவ மருத்துவக் குழு தீர்மானிக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கோவிட்
எவ்வாறாயினும், புதிய கோவிட் வகைக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கும் தடுப்பூசிகளுக்கு பதிலளிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் கூறினார்.
நாட்டில் சுவாசத்துடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்து வருகின்றன. கர்ப்பிணித் தாய்மார்கள், நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயோதிபர்கள், குழந்தைகள் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
