யாழ்ப்பாணம் இயல்பு நிலையில்! சுமந்திரனின் கதவடைப்பு போராட்டம் புஸ்வானம்...
வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது, கடந்த சில நாட்களாக இலங்கை தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்பட்டது.
முத்தையன்கட்டு இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் இன வாதத்தை உருவாக்குவதற்காகவும் மட்டுமே இந்த கடையடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என பலர் சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று முழுமையான கதைவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இயல்பு நிலையே காணப்படுகின்றது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri