யாழ். மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை
மக்கள் சற்று அவதானமாகவும், தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்(K.Maheshan) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கோவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையிலேயே காணப்படுகின்றது. இருந்த போதிலும் நேற்றைய தினம் கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 17 ஆயிரத்து 664 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை 452 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்து காணப்படுகின்றது. இன்றுவரை கோவிட் தொற்றுக்குள்ளாகி 17,500 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தற்பொழுது இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. மேலும் படிப்படியாக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றது. தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு தலங்களுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் சற்று அவதானமாக தொடர்ந்தும் சுகாதார நடைமுறையினை பின் பற்றி செயற்படுவது அவசியமாகும்.
ஆரம்பபிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. ஆரம்பபிரிவு பாடசாலைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்தபோது மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுன்றது.
மேலும் மாகாணங்களுகிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடும் எதிர்வரும் 31ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல மக்களுடைய நடமாட்டம் மற்றும் ஏனைய செயற்பாடுகளும் சுகாதார வழிமுறைகளைப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும். பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பேணி கட்டுப்பாடுகளுடன் தமது அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
