மௌன தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய இன்றையதினம் நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021 வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இந்த அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட்
சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்துக் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.