வேட்பு மனுக்கள் நிராகரிப்பிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராகும் தமிழ் மக்கள் கூட்டணி
நல்லூர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுவில் ஒருவரின் விடயம் தவறாக இருந்தாலும் அவருடைய வேட்பு மனு மட்டும் நீக்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாணத்தில் மூன்று சபைகளுக்கான வேட்பு மனுக்களும், கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(21) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பாக யாழ்.மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக வியாழக்கிழமை (20) 2023ஆம் ஆண்டு 31ஆம் இலக்க உபபிரிவு மூன்று சட்ட ஏற்பாட்டின் பிரகாரம், பெண் உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமாண உறுதியுரைக்காக கையொப்பம் இல்லாமையால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri