யாழில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு:பிரகாஷ் குற்றச்சாட்டு
யாழ். குடாநாட்டு கடற்பரப்பில் இந்திய கடற்தொழிலாளர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று (06.02.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய கடற்தொழிலாளருடைய ஆதிக்கம்
நெடுந்தீவு தொடக்கம் நயினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய கடற்தொழிலாளருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.
கோவளம் கடற்கரை பகுதியில் கடற்தொழிலாளர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.
இதனை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
