பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் செல்ல முயற்சி
வர்த்தக வகுப்பு விமான டிக்கட்டை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவை போலியானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
