நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம் (Video)
மாவீரர் வாரம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள
நிலையில், கோப்பாய் துயிலும் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் நேற்றுமுன் தினம் (21.11.2022) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்துக்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ். மாநகரசபையின் அனுமதியைப் பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்
மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு, கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றுமுன் தினம் (21.11.2022) ஆரம்பமாகியுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரைப் போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, நவம்பர் 27 ஆம் திகதி, ‘மாவீரர் நாள்’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: தீபன்
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் சிறப்பாக முன்கெடுக்பப்ட்டுள்ளது.
முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்னால் இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னால் போராளி அச்சுதன் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நினைவுரையினை முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன், பிரதேச சபைஉறுப்பினர்களான க.தவராசா, கெங்காதரம், மற்றும் முன்னால் போராளிகளான மாதவமேஜர்,அச்சுதன், சமூகசெயற்பாட்டாளர்களான சிவமணிஅம்மா,சைகிலா,சகுந்தலா ஆகியோர் நிகழ்தியுள்ளார்கள்.
இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்கா அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-கீதன்