கனரக வாகன காவு வண்டி சிறுப்பிட்டியில் விபத்து
வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று இன்று(18) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு "மோட்டார் சைக்கிள்" களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புக் கம்பம் ஆகியன பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரையால் ஏற்பட்டதா என்ற போர்வையில் அச்சுவேலி பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan