யாழ். ஆரியகுளம் சொல்லும் மக்கள் பண்பாடு: சுட்டிக்காட்டப்படும் வியப்பில் ஆழ்த்தும் செயல்
யாழ். ஆரியகுளத்தில் உள்ள சில அவதானிப்புக்கள் யாழ்ப்பாண வாழ் மக்களின் பண்பாட்டை எடுத்துரைப்பதாக நோக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாழ்ப்பணத்தினை ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகளோடு தொடர்புபட்டுள்ள ஆரியகுளத்தினை மக்களின் சில இயல்புகளை உற்று நோக்கும் கூறுகளாக கொள்ள வேண்டும்.
அதிகளவான மக்களின் பார்வைக்குரிய இடமாக ஆரியகுளம் உள்ளது.
இதனைச் சூழவுள்ள இடத்தின் அமைப்பும் அழகும் யாழ்ப்பாணத்து மக்களின் கலையுணர்வையும், கட்டமைப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தி விடக்கூடிய ஒரு இடமாக அதனைக் காண்பிக்க முடியும் என சமூகவியல் ஆய்வாளர் வரதன் குறிப்பிடுகின்றார்.
மக்களின் வருகை
ஆரிய குளத்திற்கு முன்னர் திறந்த பல்கலைக்கழகம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றது. அதிகளவான இளம் வயதினர் வந்து செல்லும் இடமாக இதனால் அது இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே நாக விகாரையும் ஆரியகுளத்திற்கு அருகில் இருப்பதும்.
இதனால் அவ்விகாரைக்கு வந்து செல்லும் சிங்கள யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அந்த இடம் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் இடமாகவும் ஆரியகுளத்தைச் சூழவுள்ள பகுதிகள் இருக்கின்றன.
ஆரியகுளச் சந்தியில் மின்சமிக்கை வழித்தடமும் ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளதால் குறிப்பிட்டளவு மக்கள் அச்சந்தியில் அடிக்கடி சில நொடிகள் தரித்து நின்று பயணப்படும் நிலை உருவாகியுள்ளது.
இச்சூழலினால் ஆரியகுளமும் அதுசார்ந்த சூழலும் நளொன்றில் அதிகளவிலான மக்களின் பார்வைக்குட்பட்டுச் செல்வதை இதன் மூலம் எடுத்துரைக்க முடியும்.
நீரின்றி இறந்த புற்கள்
நீண்ட காலமாக புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படாது இருந்த ஆரியகுளம் யாழ் மாநகர சபையினால் அண்மையில் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.
அதன்பின்னர் அது மக்கள் பண்பாட்டுக்கு கையளிக்கப்பட்டிருந்தது.
ஆரியகுளத்திற்கும் பலாலி வீதிக்கும் இடையிலுள்ள பகுதியில் நிழல் மரங்கள் நாட்டப்பட்டதோடு இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மரங்களின் அடிப்பகுதியில் அழகுபடுத்தலுக்காக புற்களை வளர்க்க முயன்றிருக்கின்றனர்.ஆயினும் அவை உரிய முறையில் நீர் விட்டு பராமரிக்கப்படவில்லை.
அல்லது நிழல் மரங்களின் கீழ் உள்ள நிலத்தினை பசுமையான புற்களை நாட்டி வளர்த்து பசுமையாக ஒழுங்கமைப்பில் உறங்கலாம்.
ஆயினும் அந்த முயற்சி தோல்வியுற்று உள்ளது.புற்கள் இறந்து பசுமையிழந்து வறண்டுபோயிருப்பதை அவதானிக்க முடிகின்றது.இந்த அவதானிப்பு கவலைக்குரிய வெளிப்பாடாகும்.
சமூகப்பொறுப்புடன் செயற்படும் உணர்வோடு யாழ்ப்பாணத்து இளம் சமூகம் இல்லையோ என்ற கேள்வி எழுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
அதிகளவான இளையவர் நித்தம் வந்து போகும் நிலையில் நிழல் மரங்களின் அடிப்பகுதியில் வளர்க்கப்பட்ட புற்களுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்ற உணர்வு யாரொருவருக்கும் உந்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அழகுபடுத்தப்படுமா ஆரியகுளம்
ஆரியகுளத்தின் இன்றைய தோற்றம் மனதிற்கு இதமளிக்கும்படி இருக்கவில்லை.அதனை மேலும் மெருகூட்டும் வகையில் அழகுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
ஆரியகுளத்தினைச் சூழவுள்ள சூழல் கூறுகள் நேர்த்தியுடன் பராமரிக்கப்படுவதோடு அது யாழ்ப்பாணத்து மக்களின் கலையுணர்வை வெளிக் காட்டும் வகையில் இருத்தல் வேண்டும் என சமூகம் ஆர்வலர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
பொதுவாக நீர்நிலைகளில் தாமரை, அல்லி போன்ற நீர் மலர்களையும் நீர் தாவரங்களையும் திட்டமிட்ட கலையுணர்வோடு வளர்த்து அழகுபடுத்த முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இவை பற்றி ஏன் யாழ்ப்பாணத்து சமூகம் சிந்தித்து செயலாற்ற முயற்சிக்கவில்லை என கேள்வியெழுப்பப்டுவதும் யோசிக்க வைக்கும் விடயமாகும்.ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி ஆரியகுளம் நகர்ந்து செல்லுமா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |