இலங்கையருக்கான நுழைவுத் தடையை மேலும் நீடித்துள்ள இத்தாலி
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் மிகவும் பரவக்கூடியது என்ற எச்சரிக்கையின் கீழ் தொடர்ச்சியாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வரும் மக்களுக்கான நுழைவுத் தடையை இத்தாலி இன்று நீடித்துள்ளது.
இந்த தடை கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் நிறைவடையவிருந்தது.
இந்த நிலையில், தடை ஜூன் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸின் இந்திய கோவிட் -19 (பி .1.617) மாறுபாடு கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
சமீபத்திய வாரங்களில் தெற்காசிய
நாடுகளைத் தாக்கிய பேரழிவு தரும் கோவிட் -19 அலைக்கு இந்த வைரஸ் காரணம்
என்றும் கண்டறியப்பட்ட நிலையிலேயே இத்தாலியின் அறிவிப்பு இன்று
வெளியாகியுள்ளது.