கனடாவை தொடர்ந்து இத்தாலியும் சுமங்கல டயஸை தூதுவராக ஏற்க மறுப்பு?
இத்தாலிக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கான எந்தவித பதிலையும் கடந்த ஐந்து மாதங்களாக வழங்கவில்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டு உள்ளதால் கனேடிய அரசாங்கம் அவரை ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இத்தாலிக்கான தூதுவராக சுமங்கல டயஸை நியமிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும் இத்தாலிய அரசாங்கம் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது சுமங்கல டயஸ் இத்தாலிக்கான தூதராக பொறுப்பேற்றதாகவோ தெரிவிக்கப்படவில்லை.” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
1984 முதல் நாட்டிற்கு சேவை செய்த ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ், 2020 நவம்பர் 2ம் திகதி விமானப்படையின் 17 வது தளபதியாக ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
