திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்துக்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று(14) மாலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இம்முறை தமிழரசுக் கட்சியானது திருகோணமலை மாநகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, கிண்ணியா பிரதேசம், தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கடுமையான உழைப்பு
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சண்முகம் குகதாசன், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுமையாக உழைப்பதன் மூலமாக போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 59 நிமிடங்கள் முன்
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam