இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டமானது இலண்டனிலுள்ள நோர்டோல்ட் சனசமூக நிலையத்தில் (Northolt Community Centre) நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிர்வாகசபை
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையானது தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இந்த கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது நிர்வாகசபை உறுப்பினர்களிடையே நடைபெற்றுள்ளதோடு கிளையின் அடுத்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி (26.05.2024) நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.