யாழில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(01.05.2025) காலை நடைபெற்றுள்ளது.
கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்தக் கூட்டம், தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்களின் உரைகளுடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிறைவடைந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
