அனைவரும் ஒன்றிணைந்து திருகோணமலையை கட்டியெழுப்புவோம்: மாநகர முதல்வர்
திருகோணமலை மாநகர சபையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜாதி, மத ,மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவோம் என மாநகர சபையின் மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு நேற்று (23)இடம் பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அனைத்து உறுப்பினர்களின் உதவிதை கோரி நிற்கிறேன்.எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில், மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது.அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் உள்ள மாநகரங்களில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய வகையில் திருகோணமலை மாநகரத்தை எடுத்துக் காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |