சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தற்போது முடியாது – ஜனாதிபதி
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தற்போதைக்கு முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டியதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையின் கீழ் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களது மட்டுமன்றி ஏனைய அரச சேவையாளர்களின் சம்பள முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது சம்பள முரண்பாடுகளை களைவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நிலைமைகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சம்பளங்களை உரிய நேரத்திற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இந்த தருணத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam