இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் விடயம்!
இந்த வருடத்தின் இரண்டு வாரங்களில் 3,918 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் ஷிலந்த செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தின் முதல் 02 வாரங்களுடன் ஒப்பிடுகையில் டெங்கு தொற்று வீதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நுளம்பு பெருகும் இடங்களை இல்லாதொழித்து டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவுமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan