மாகாண சபைத் தேர்தல் முறையில் சட்ட சிக்கல்கள் : கலந்துரையாட அமைச்சு தீர்மானம்
மாகாண சபைத் தேர்தல் முறையில் தற்போதைக்கு முன்னெழுந்துள்ள சட்டச் சிக்கல் குறித்து கலந்துரையாட உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் மாகாண சபைகள் பயன்பாட்டில் இன்றி, ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்கி வருகின்றன.
பதிவுபெற்ற அரசியல் கட்சிகள்
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது.
எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தல்கள் தொடர்பிலும் எல்லை மறுசீரமைப்பு, தேர்தல் விகிதாசார அல்லது வட்டார முறையில் நடத்தப்படுவதா? அல்லது கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதா போன்ற சிக்கல்கள் தற்போதைக்கு முன்னெழுந்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள பதிவுபெற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனையொன்றை நடத்தி, தீர்மானமொன்றை மேற்கொள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
