மட்டக்களப்பு மாநகரசபைக்கு எதிராக கிளம்பும் குற்றச்சாட்டுகள்! மறுக்கும் உறுப்பினர்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடைகளை பெற்ற ஒருவர், மாநகரசபைக்கு எதிராக மதவாத செயற்பாடுகளை தூண்டுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று(31.12.2025) நடந்த ஊடகச் சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில், மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
போலியாக பரப்பப்படும் செய்தி
மட்டக்களப்பு மாநகரசபை தனியார் பேருந்து நிலையத்தின் மேல் தளத்தை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள ஒருவர், சில இளைஞர்களை வைத்து மாநகரசபைக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில முக்கிய இடங்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், தமது சொந்த நிகழ்வுகளை தமது இடங்களில் நடத்துவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லையெனவும் திட்டமிட்ட வகையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜிம் வைத்திருக்கும் நிறுவனர் ஒருவர், அங்கு வரும் நபர்களிடம் பணம் அறவிட்டு, தனியார் பேருந்து நிலையத்தில் நடத்தவிருந்த இசை நிகழ்வினை நடத்த அனுமதிக் கொடுக்கவில்லை.
இதனை, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நடத்தவிருந்த இந்த நிகழ்விற்கு அனுமதி வழங்கமுடியாது என மறுத்து வி்ட்டனர் என போலியான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.