தேசிய அடையாள அட்டை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 15 மில்லியன் முன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு சுமார் 17 மில்லியன் அட்டைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கள் பதிவுத் திணைக்களம் 2017ஆம் ஆண்டு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
புதிய முறைமை
இதேவேளை, எதிர்வரும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ், 15 வயதை பூர்த்தி செய்த அனைத்து இலங்கை பிரஜைகளும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக 17 மில்லியன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளின் தேவை உள்ளது, மேலும் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச போட்டி ஏலங்களை அழைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
