ஈரானின் தீவிர பதிலடி! இலக்குவைக்கப்படும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்கள்
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியம் மிக மோசமான போர்ச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் "கடுமையான" தாக்குதலைத் தொடங்கியுள்ளது.தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "வலுவான பதிலடி" கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.
சிவப்புக்கோடும்" (Red lines) கிடையாது
இது குறித்து ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்களும் இலக்குகளாக கருதப்படும். இனி எந்த ஒரு "சிவப்புக் கோடும்" (Red lines) கிடையாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் பிற நாடுகளின் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் (E3 நாடுகள்) ஆகிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அமைதி பேச்சுவார்த்தை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சனிக்கிழமை அன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ஈரானின் இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
தங்களது நாடுகள் ஈரான் மீதான நேரடித் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர்கள், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும், அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan