ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் கோலானி படையணி சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பிறகு, தற்போது அந்த அமைப்பு தலைமை இல்லாத அணியாக காணப்படுகின்றது.
ஹிஸ்புல்லா தாக்குதல்
எனினும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் தாக்குதல் அதன் திறன்களை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதாக போரியல் வல்லுநர்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான எச்சரிக்கைகளை கையாளும் நோக்குடன் இஸ்ரேல் கோலானி படையணியை லெபனான் எல்லையில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தெற்கே கோலானி படையணியின் இராணுவத்தளமொன்றை நிறுவுவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
