இஸ்ரேலின் அனைத்து விமான நிலையங்களும் முடக்கம்!
இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வான்வெளி மற்றும் விமான நிலையங்களை முழுமையாக மூடுவதாக அறிவித்தது.
ஈரானுடனான போர்பதற்றத்திற்கு மத்தியில், இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மேற்கு ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்ததாக இன்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் அதன் பழிவாங்கலை ஆரம்பித்தது.
பதில் தாக்குதல்கள்
ஈரானின் குறித்த தாக்குதலில், இஸ்ரேலின் தேசிய அவசர சேவை, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபாவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தது.
அத்துடன், ஹைஃபாவில் எறிகணைகள் தரையிறங்கியதாகவும், அதன் தாக்கத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியன.
இந்நிலையிலேயே, பாதுகாப்பு கருதி இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், வான்வெளி மற்றும் விமான நிலையங்களை முழுமையாக மூடியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
