காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்துள்ள இஸ்ரேல்
காசா(Gaza) போரானது சர்வதேச ரீதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் முக்கிய எல்லை பகுதியை இஸ்ரேல்(Israel) மீண்டும் திறந்துள்ளது.
கடந்த வார இறுதியில் காசாவின் முக்கிய எல்லை பகிடியான கெரெம் ஷாலோமை இலக்கு வைத்து ஹமாஸ் வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் அதிரடியாக மூடியது.
உதவிகள் செல்ல முடியாத நிலை
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன.
இந்த நிலையில் கெரெம் ஷாலோம் எல்லை பகுதியை இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. போரில் காசா நகரம் பாதிப்படைந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
எனினும் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையினால் மனிதாபிமான உதவிகளில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
