இஸ்ரேல் - ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா வைத்தியசாலைகள் - அத்தியாவசிய சேவைகள் பாதிக்கும் அபாயம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் தாக்குதல்
கடந்த சனிக்கிழமை (07.10.2023) பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000இற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.
தற்போது 5வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பை கட்டார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.
தொடரும் தாக்குதல்
இவ்வாறான சூழலில் காசா பகுதியை தொடர்ந்து லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானிலிருந்து பீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவிலும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதுடன் படுக்கைகள், மருந்துகள் இல்லாததால் 5000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தவித்து வருகின்றதாக செய்திகள் கூறுகின்றன.
அத்துடன் 10 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் நீடிக்கும் என்பதால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், காசாவில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றதாகவும் தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
