இலங்கையில் மேலும் பல பிரதேசங்கள் இன்று தனிமைப்படுத்தல்
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேலும் சில பகுதிகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டம்
பந்துரலிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பொல்லுன்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு, இங்குருதலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, மிந்தலன கிராம உத்தியோகத்தர் பிரிவு, மோரபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, பெலேந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹெடிகல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மோரபிடிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, நீதியாவல பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட நீதியாவல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹதென்ன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட வல்லாவிட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாகலன்தாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, போதலாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, கட்டுயகெலே வெல்மீகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு, கீழ் ஹவெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவு, மிரிஸ்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பெலவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொலன்னறுவை மாவட்டம்
ஹெலஹெர பொலிஸ் அதிகாரப் பிரிவின் சருபிம கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.