இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8 வது நாளில் கோவிட் பரிசோதனை செய்துக்கொள்வது கட்டாயம் எனவும் இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பரிசோதனையில் கோவிட் தொற்றி இருப்பது உறுதியானால், மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிரித்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளது.