நாடளாவிய ரீதியில் களைக்கட்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் (PHOTOS)
கிறிஸ்மஸ் பெருவிழா உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், சவுக்கு மரத்தடிகளின் விற்பனைகள்பல பகுதிகளில் களைக்கட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சவுக்கு மரத்தடிகளின் விற்பனை களைகட்டியுள்ளதுடன்,அதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் தங்களது வீடுகளில் பாலன் குடில் அமைத்து சவுக்கு மரங்களால் அலங்கரிப்பது வழமையாகும்.
அந்த வகையில், மன்னாரில் குறிப்பாக பொது மக்கள் பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்களாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான கிறிஸ்து பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலிகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்களை சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



