இஸ்லாமிய அடிப்படைவாதம் இன்னும் முடிவு பெறவில்லை
இஸ்லாமிய மதத்தின் பெயரால் கடந்த காலத்தில் நாட்டில் மேலோங்கிய வஹாபிஸ , அடிப்படை வாத செயற்பாடுகள் இன்னமும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டுகொள்ள முடியாத பல்வேறு கோணங்களில் அவை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும் முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டம் , காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கி தள்ளப்படுவதற்க்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே தோற்றுவிக்கின்றனர்.
ஒஸ்தான் மன்சூரின் மாணவரான தற்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கிய பதவியொன்றுக்கு சிங்கப்பூர் பிரஜையான ரொஹான் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் கீழ், சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம் இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்க்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்க்கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுருத்திவந்தோம்.
அதற்கமைய கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பெரும்பாண்மை சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தெரிவான ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்க்கு ஏற்றவகையிலான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்று எம்மைப்போன்றே மேலும் பலர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் கூட வேறு பல வழிகளிலும் அடிப்படை வாத செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஜிஹாத் கொள்கையானது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் அதேவேளை அது உலகளாவிய ஜிஹாத் கொள்கையாக மாற்றமடையக்கூடிய போக்குகளும் காணப்படுகின்றன.
எனவே இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும்.அதேவேளை இவைகுறித்து தொடர்ச்சியாக குரலெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.