இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தை
இந்தியாவில் (India) கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் இந்திய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனடிப்படையில், சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை ஆராய்கிறது நிஜக்கண் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |