இந்தியாவில் கைதான 4 ஐ.எஸ் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெற்கு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் இந்திய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அவற்றை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர்கள் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தற்போதைய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
