பதுக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பின் பின் விற்பனையா..! நா.வர்ணகுலசிங்கம் கேள்வி
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெயை பதுக்கி வைத்துவிட்டு தற்போது விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விநியோகிக்கிறதா என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் வராமல் மக்கள் பட்டினியால் பாரிய சிக்கல்களுக்கு உள்ளாகினர்.
கறுப்புச்சந்தை
மண்ணெண்ணெயை கறுப்புச் சந்தையில் 1200 ரூபாய்க்கு வாங்கி தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.
மண்ணெண்ணெய் விலையை 340ஆக அதிகரித்துவிட்டு தற்போது வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் வருகின்றது.
இந்த நிலையில் தொழில் செய்வதற்கு நம்மிடம் பணம் இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலை செய்து கொள்ளையடித்து விட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கின்றது.
தற்போது மானியம் என்ற போர்வையில் படகுகளின் பதிவுப் புத்தகங்களையும், வங்கி கணக்கிலக்கங்களையும் நீரியல்வளத் திணைக்களத்தினர் வாங்கினார்கள். புரவிப் புயலுக்கும் இவ்வாறு வாங்கி ஏமாற்றினர்.
மண்ணெண்ணெய் விநியோகம்
150 ரூபாவிற்கோ அல்லது பழைய விலைக்கோ மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்.
இந்த விலைக்கு மண்ணெண்ணெய் தராது விட்டால் நான்கு மாவட்ட கடற்றொழிலாளர்களும் கலந்தாலோசித்து வடக்கில் நாங்கள் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
150 ரூபாவிற்கு உள்ளே மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கினால் தான் எம்மால் தொழில் செய்ய முடியும்.
இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் எந்த பலனுமில்லை. அரசாங்கம் அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதியிடம் இருந்து பணத்தை எடுத்து நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள்.
மண்ணெண்ணெய் விலையேற்றம்
மண்ணெண்ணெய் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அதை பற்றி யாருக்கும் சிந்தனை கிடையாது.
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சுருக்கு வலை, நுளம்பு வலை போன்ற சட்டவிரோத தொழில்கள் அதிகரித்து விட்டதனால் மீன்வளங்கள் அழிக்கப்படுகிறன.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அமைச்சர்கள் இருந்துவிட்டு நாளை போய் விடுவார்கள். நீரியல்வளத் துறையே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
