இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தவறிப்போன 2.5 மில்லியன் டொலர்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வருவதை இந்திய சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இதன் பின்னணியில் இந்த புதிய சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புறக்கணிக்கும் சுற்றலா பயணிகள்
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான எதிர்மறையான தகவல்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவசர கால சட்டம் காரணமாக இலங்கை வருவதனை பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இந்தியர்களும் இலங்கை வருவதனை நிறுத்தியுள்ளனர்.
எப்போதுமே இலங்கைக்கு அதிகம் வரும் சுற்றுலா பயணிகளாக இந்தியர்களே காணப்பட்டனர். எனினும் கடந்த மாதம் இந்தியர்கள் இரண்டாம் இடத்திற்கு சென்று பிரித்தானியர்கள் முதலிடத்திற்கு வந்துள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கிண்ணம்
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோட்டல் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு டொலர்கள் விரைவாக கிடைக்க வேண்டுமாயின், விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டிய சிறந்த துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதாக ஹோட்டல் ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்நாட்டில் நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது. இதனால் இலங்கைக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் நிலைமை குறித்த எதிர்மறையான அறிக்கைகள் இலங்கை ஆசியக் கிண்ணத் தொடரை நடத்துவதில் தோல்வியடைய காரணமாக அமைந்ததாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடத்தப்பட்டால், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறும் வாய்ப்பும் இருந்தது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் மாதமாக ஒகஸ்ட் மாதம் கருதப்படுகிறது.
எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri
