சாரா உயிருடன் இல்லை? அமைச்சர் வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒருவரின் மனைவியான இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சாரா என்கிற புலஸ்தினி உயிரோடு இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டுதாரிகள் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியாகும் தகவலை நிரூபிக்கவும் சாட்சிகள் இல்லை. இவை வெறும் வதந்திகளே.
சாரா உயிர்வாழ்வதாக கூறப்படும் சாட்சிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. இரண்டு தடவைகள் DNA பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையும் முன்னெடுக்க நீதிமன்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குண்டுதாரியின் மனைவியான காதியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இதில் தொடர்புபட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க சாட்சிகள் எதுவும் இல்லை.
சந்தேகநபர்களை மறைக்க வேண்டிய அவசியம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.