அமெரிக்காவிற்கு ஐ.எஸ் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை? உளவுத்துறை அதிகாரி தகவல்
அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாகாணத்திலுள்ள மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை வெடி வைத்துத் தகர்க்க ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த திட்டம் தொடர்பில் உளவுத்துறை தகவலளித்துள்ளதை தொடர்ந்து மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாடு முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பு தனி நபர் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரியான ஜோன் கோஹன்(John Cohen) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் செவ்வாய் கிழமை விர்ஜினியாவில் ஆளுநர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குறித்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam