கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய தற்போதைக்கு அனுமதியில்லை?
கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த இடங்களில் காணப்படும் நீரின் அளவு பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்யும் இடங்கள் தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலங்களை கட்டாயமாக அடக்கம் செய்ய வேண்டுமாயின் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படும் வரையில் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருக்க முடியும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 43 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam