சர்வதேசத்தை திசை திருப்புவதா கோட்டாபயவின் நோக்கம்? முக்கிய செய்திகளின் தொகுப்பு
நாட்டில் மீண்டுமொரு வன்முறை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் படி ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
அதைவிடுத்து வழமைபோல சர்வதேசத்தை திசை திருப்புவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியாகவே கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பும் மாறிவிடும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது முக்கிய செய்திகளின் தொகுப்பு,