முல்லைத்தீவில் வான்பாய ஆரம்பித்துள்ள 5 குளங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பெரிய குளங்களில் 5 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன.
நேற்றைய தினம் மழைவீழ்ச்சி பதிவாகாத நிலையிலும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மாவட்டத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 20 அடி கொள்ளளவு கொண்ட விசுவமடு குளம் வான்பாய ஆரம்பித்துள்ளது.
புதுக்குடியிருப்பு மருதங்குளம் 14 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளம் தொடர்ச்சியாக வான்பாய்ந்து வருகின்றது.
வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் பழைய முறுகண்டிக்குளம் 9 அடி நீர் கொள்ளளவு கொண்டகுளம் வான்பாய்கின்றது.
9 அடி நீர் கொள்ளளவு கொண்ட கோட்டைகட்டிய குளமும்,11 அடி நீர் கொள்ளவு கொண்ட தேறாங்கண்டல் குளமும் வான்பாய்கின்றன.
எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


பதினாறாவது மே பதினெட்டு 8 மணி நேரம் முன்

தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
