கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயல்

Kilinochchi Northern Province of Sri Lanka Education
By Uky(ஊகி) Jul 11, 2024 07:30 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

 கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இதனால் பாடசாலைக்கு வராது தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.

இது மாணவர்களுக்கான பாடசாலைக் கல்வியினை பாரியளவில் பாதிப்படையச் செய்து விடும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை - பலரை கொலை செய்ய திட்டம்

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை - பலரை கொலை செய்ய திட்டம்

தனியார் கல்வி நிலையத்திற்கு பணம் செலுத்தி செல்லும் மாணவர்களின் இயல்பு, பாடசாலைக் கல்வியை மட்டும் நம்பி தங்கள் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்து விடும் என இது தொடர்பில் சமூகவியல் ஆய்வாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

irresponsible-private-educational-kilinochchi

தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்.பாடசாலைக் கல்வியோடு பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும்படி, தனியார் கல்வி நிலையங்கள் இயங்க வகை செய்ய வேண்டும்.

இது தொடர்பில் மாவட்ட மட்டத்திலான பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை விரைவாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இயக்கச்சி பண்ணையில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் மாங்காய்கள்

இயக்கச்சி பண்ணையில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் மாங்காய்கள்

அனுப்பப்பட்ட கடிதம்

கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு கடந்த 05ஆம் திகதி (05.07.2024) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

irresponsible-private-educational-kilinochchi

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கோவிட் காலப்பகுதியின் பின்னர் 2021,2022 பிரிவு மாணவர்கள் 4ம் தவணையுடன் பாடசாலைக்கு வருவது தனியார் கல்வி நிலையங்களால் நிறுத்தப்பட்டது.

இதனால் எமது மாவட்டத்தில் உயர்தரக் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.(பாடசாலை புள்ளி விபரப்படி) இதே போல் ஏனையதர மாணவர்களும் தற்போது மறிக்கப்பட்டு பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்கின்றார்கள்.

இதனால் கற்றல் தொடர்பாகவும் சமூக சீர்கேடுகள் தொடர்பாகவும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.மேலும் மாலை நேரத்தில் இரவு 7 மணி தாண்டி வகுப்புகள் நடைபெறுவதால் பல மாணவ மாணவிகள் தவறாக நடக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது.

மலேசிய இந்திய காங்கிரஸின் சேவையை பாராட்டிய ஆளுநர் செந்தில்..!

மலேசிய இந்திய காங்கிரஸின் சேவையை பாராட்டிய ஆளுநர் செந்தில்..!


எனவே தயவு கூர்ந்து பாடசாலை நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படும் தனியார் வகுப்புக்களை தடை செய்து மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கு வழி சமைக்குமாறும் இரவு வகுப்புக்களுக்கு உகந்த நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்.

இது தொடர்பில் கூடிய கவனமெடுக்கப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால கற்பித்தல் அனுபவம் கொண்ட ஒரு பாடசாலை ஆசிரியராக அந்த சமூக ஆர்வலர் இருப்பதோடு மாணவர்களின் கற்றல் மற்றும் அவர்களது எதிர்காலம் தொடர்பில் அவர் அதிக அக்கறையினை கொண்டிருப்பதையும் அவருடன் மேற்கொண்ட உரையாடலின் மூலம் அறிய முடிகின்றது.

வலயக்கல்வி அலுவலகம் 

கிளிநொச்சி நகரின் முன்னனி பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆரோக்கியமான கல்விச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் பாடசாலையில் கற்பித்தலை சிறப்பாக முன்னெடுக்க முடியவில்லை என்றும் முறையிடும் போது கிளிநொச்சியில் உள்ள வலயக்கல்விப் பணிமனைகள் என்ன செய்து கொண்டிருக்கிறன என்ற கேள்வி எழுகின்றது.

irresponsible-private-educational-kilinochchi

தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்து இயக்குவதற்கான எந்த நடைமுறைகளும் வடக்கில் மட்டுமல்ல முழு நாட்டிலுமே இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பாடசாலைக் கல்வியினை முழுமையடையச் செய்து மாணவர்களின் கல்வி வெற்றியில் பங்கெடுப்பதாக கூறிக்கொள்ளும் தனியார் கல்வி நிலையங்கள் எவையும் தமக்கென பொதுவான நடைமுறை யாப்புக்கள் எவற்றையும் இதுவரை உருவாக்காது இருப்பது அவர்களின் நேர்த்தி மிக்க செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்ப இடமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த சூழலில் வலயக்கல்விப் பணிமனைகள் பாடசாலைகளையும் தனியார் கல்வி நிலையங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்.

தனியார் கல்வி நிலையங்களை பிரதேச செயலகங்கள் பதிவு செய்வதோடு கல்விச் செயற்பாடுகளை வலயக்கல்விப் பணிமனைகள் கண்காணிப்பதாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுவதும் இங்கே நோக்கத்தக்கது.

புதிய விசா கட்டணம் சர்வதேச பயணிகளின் வருகையை பாதிக்கவில்லை

புதிய விசா கட்டணம் சர்வதேச பயணிகளின் வருகையை பாதிக்கவில்லை

விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம்

விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US