இலங்கையின் திடீர் அழைப்பு! போர்க்களத்திற்கு தொலைவில் குறிவைத்து வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் 'டெனா' (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரானிய தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நாட்டிற்குள் கப்பல் வந்தமைக்கான காரணம்
மேலும், அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் எனவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் நமது அண்டை நாடுகளுக்கு அனுப்பும் செய்தியே முக்கியமானது என்றும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆட்சிகளின் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஆட்சி சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளைப் புறக்கணிக்கிறது என்றும், எந்தவொரு விதிமுறைகளுக்கும் கட்டுப்படாதது போல் தன்னைக் கருதுகிறது என்றும், சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானக் கோட்பாடுகளை மீண்டும் மீண்டும் மீறுவதில் சியோனிச ஆட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்க்களத்தில் மட்டுமே அனுமதி
மனிதாபிமான சட்டத்தை மீறி, மார்ச் 2026-ல், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகே, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படைக்குச் சொந்தமான 'டெனா' (DENA) கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியது.
இந்த கப்பலைக் குறிவைத்ததை ஒரு கேலிக்கூத்தாக அமெரிக்க ஜனாதிபதி கருதினார், இதன் விளைவாக கப்பலில் இருந்த 104 மாலுமிகள் உயிரிழந்தனர்.

மனிதாபிமானச் சட்டத்தின்படி, எதிரி தரப்பு மீதான தாக்குதல்கள் போர்க்களத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்றும், ஆனால், அந்தக் கப்பல் போர்க்களத்திலிருந்து 1,100 கடல் மைல்களுக்கும் அதிகமான தொலைவில் இருந்தது என்றும், அதனிடம் எந்த ஆயுதங்களோ அல்லது தற்காப்புத் திறன்களோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி
கப்பல் மீதான தாக்குதலும், மினாப் பாடசாலை மாணவிகள் மீதான தாக்குதல்களும் அமெரிக்காவின் வெட்கக்கேடான செயல் என்றும், ஜெனீவா உடன்படிக்கைகளின் மீறல் என்றும், ஈரான் போரை நாடவோ வரவேற்கவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிய தேசம் ஒரு அமைதியை விரும்பும் தேசம் என்றும், அதற்கு வரலாறு சாட்சி என்றும், நமது நிலத்தைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு ஆக்கிரமிப்பாளருக்கும் நாங்கள் தீர்க்கமாகப் பதிலடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிராந்திய நீர்ப்பரப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி, ஒரு போர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam