ஈரானுக்கு படையெடுக்கும் அமெரிக்க 82nd Airborne Division.. வளைகுடாவை அதிரவைக்கும் ஈரானின் தயார்நிலை
மத்திய கிழக்கிற்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகளை அனுப்பத் திட்டமிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு, ஈரானிய அறிஞர் ஃபோட் இசாடி கடுமையாக பதிலளித்துள்ளார்.
அமெரிக்க தரைப்படைகள் வந்தால், அதை ஈரான் இராணுவத் தளபதிகள் வரவேற்பார்கள் என்றும், தரையில் இருக்கும் படைவீரர்களை தாக்குவது விமானங்களை விட எளிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு “ஈரான் ஜெனரல்கள் அதை வரவேற்பார்கள். F-35 போன்ற விமானங்களைத் தாக்குவதைக் காட்டிலும் தரையில் இருக்கும் படைவீரர்களை தாக்குவது எளிது. அதனால் பல அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள்” என அவர் கூறினார்.
82nd Airborne Division
அமெரிக்காவின் பென்டகள், வட கரோலினாவில் உள்ள 82nd Airborne Division படைப்பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெறும் நிலையில் கூட, அமெரிக்க இராணுவத்தின் இருப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதே நேரத்தில், பாகிஸ்தான் நடுநிலையாக்கராக செயல்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கு முந்தைய நாளில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்கா - ஈரான் இடையே “நல்ல முன்னேற்றம் காணப்படும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன” என்று கூறியிருந்தார். ஆனால், இதை ஈரான் “பொய்யான தகவல்” என மறுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்மொழிவுகள் குறித்து ஈரான் எச்சரிக்கையாக இருப்பதாகவும், முந்தைய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தாக்குதல்கள் நடந்துள்ளதால் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் இஸாடி கூறினார்.
ஈரானின் கோரிக்கைகள்
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, ஈரான் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

- பொதுமக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
- இனி இப்படியான தாக்குதல்கள் நடைபெறாது என்ற உறுதி வழங்கப்பட வேண்டும்.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், Strait of Hormuz வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்கலாம் என்றும், அதனை செலுத்த விரும்பாதவர்கள் அமெரிக்க அரசால் இழப்பீடு பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் இராணுவ திறன் குறித்து பேசும்போது, “இந்த போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 1979 புரட்சியிலிருந்து அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஈரான் முதலீடு செய்து வருகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
தயார்நிலையில் ஈரான்
அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து சந்தேகம் வெளியிட்ட இஸாடி, ட்ரம்பை “நிலையற்ற முடிவுகள் எடுக்கும் நபர்” என்றும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தாக்கத்தில் உள்ளவர் என்றும் விமர்சித்தார்.

இந்த போரை “தோல்வியடைந்த போர்” என வர்ணித்த அவர், அமெரிக்கா தோல்வியை உணர்ந்தபின், ட்ரம்ப் வெற்றியை அறிவித்து பின்னர் வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் கூறினார்.
ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளதாக அதன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 13 அமெரிக்க படைவீரர்களும், பல பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில், ஈரானின் மின் நிலையங்களைத் தாக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், தரைப்படைகளை அனுப்பும் வாய்ப்பை அவர் முற்றிலும் மறுக்கவில்லை. இஸ்ரேலும் தரைப்படைகளை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam