அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் இராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், கட்டார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல்
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் போரை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யா இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஈரான் ஏவியது.
இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக சர்வதேச தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri