15 நாட்கள் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை! 8 திட்டங்களுக்கு ஒத்துக்கொண்ட அமெரிக்கா - வெளியான அறிக்கை
அறிவிக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தன் விவரங்களை இறுதி செய்வதற்காக" அதிகபட்சம் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஒப்புதல்
களத்தில் ஈரானின் வெற்றியானது அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் வலுப்படுத்தப்படும்" என்ற நோக்கிலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அரசு தொலைக்காட்சி அறிவித்திருந்த 10 அம்சத் திட்டத்தையும் தாண்டி இந்த அறிக்கை வந்துள்ளதுடன், பின்வருவனவற்றுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான தனது "ஆக்கிரமிப்பை" மீண்டும் செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாடு தொடர்வது [யுரேனியம்] செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது.
அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்குதல்.
[ஐ.நா] பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் அனைத்துத் தீர்மானங்களையும் முடிவுக்குக் கொண்டுவருதல் ஈரானுக்கு இழப்பீடு வழங்குதல்.
இப்பகுதியிலிருந்து அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுதல்.
மேலும், 'லெபனானின் இஸ்லாமிய எதிர்ப்பு' அமைப்புக்கு எதிரான போர் உட்பட, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்பனவாகும்.
10 அம்சத் திட்டம்
அதற்கு முன்னர், ஈரானின் கூற்றுப்படி, நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்தத்திற்கான 10 அம்சத் திட்டம்
ஈராக், லெபனான் மற்றும் யேமன் மீதான போரை முழுமையாக நிறுத்துதல்
காலவரையின்றி ஈரான் மீதான போரை முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துதல்

பிராந்தியத்தில் உள்ள அனைத்து மோதல்களையும் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருதல்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒரு நெறிமுறையையும் நிபந்தனைகளையும் நிறுவுதல்
ஈரானுக்கு புனரமைப்பு செலவுகளுக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துதல்
ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் முழு அர்ப்பணிப்பு அமெரிக்கா வசமிருந்த ஈரானிய நிதிகள் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படுதல்
எந்தவொரு அணு ஆயுதங்களையும் கையகப்படுத்த முற்பட மாட்டோம் என ஈரான் முழுமையாக உறுதியளிக்கிறது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், அனைத்து முனைகளிலும் உடனடிப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருகிறது என்பனவாகும்.
இன்னும் சில மணிநேரங்களே..! உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ட்ரம்பின் தாக்குதல் நேரம் - பெரும் பதற்றம்
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri