ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படும் : ஈரான் விடுத்த கடுமைான எச்சரிக்கை
ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை, இன்று முதல் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அந்த நீரிணை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு “நம்பகத்தன்மை இல்லை” என்று IRGC கூறியுள்ளது.
நங்கூரமிட்டுள்ள இடத்திலிருந்து எந்த விதமான கப்பலும்
கப்பல்கள் நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல ஈரான் முன்னதாக அனுமதி அளித்த அறிவிப்பைத் தொடர்ந்து, IRGC ஒருங்கிணைப்புடன் பல கப்பல்கள் அவ்வழியாகச் சென்றதாக அது தெரிவித்தது.
இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்கா ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்கவில்லை, எனவே இன்று பிற்பகல் முதல் முற்றுகை நீக்கப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலில் நங்கூரமிட்டுள்ள இடத்திலிருந்து எந்த விதமான கப்பலும் நகரக்கூடாது என்று IRGC எச்சரித்ததோடு, அந்த நீரிணையை நெருங்குவது "எதிரியுடன் ஒத்துழைப்பதாக" கருதப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு கப்பலும் குறிவைக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam