மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி, மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, ஈரானின் 'ஹியூமானிட்டி' என்ற பிரம்மாண்ட மசகு எண்ணெய் கப்பல், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்து மலேசியாவின் தென்கிழக்குக் கடற்பகுதிக்கு வந்தடைந்தது.
மலேசியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதியான 'EOPL' என்ற இடத்தில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
அமெரிக்காவின் தடை
அங்கு காத்திருக்கும் இடைத்தரகர் கப்பல்களுக்கு 'கப்பலிலிருந்து கப்பலுக்கு' எண்ணெயை மாற்றி விநியோகிப்பதற்காகவே இந்தக் கப்பல் அமைப்பை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மாற்றப்படும் மசகு எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கே கொண்டு செல்லப்படுகிறது.
பல தசாப்தங்களாகவே, அமெரிக்காவின் தடைக்குள்ளான ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் எண்ணெய் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் ஒரு மறைமுகச் சந்தையாக இந்தப் பகுதி செயல்பட்டு வருகிறது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam